பெண் நடத்துனர்களுடன் கூடிய பாடசாலை பஸ் சேவை

 


பெண் நடத்துனர்களுடன் கூடிய பாடசாலை பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவிக்கையில், அடுத்த வாரம் முதல் 1000 பழுதுகள் திருத்தப்பட்ட பஸ் வண்டிகள் மீள சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், மேலும் 100 பஸ்கள் பாடசாலை சேவைக்கு உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்துரை வழங்கிய அமைச்சர், வௌ்ளோட்ட நடவடிக்கையாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பெண் நடத்துனர்களைக் கொண்ட பாடசாலை பஸ் சேவைகளை எதிர்காலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்