இவ்வருடத்தில் 87 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்



இந்த வருடத்தில் இது வரை 87 மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வருடத்தில் மொத்தமாக 289 நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


இதில் அநேக சம்பவங்கள் பாதுகாப்பற்ற நீரோட்டங்களிலும், கிராமப்புற நீர்த்தேக்கங்களிலும் நீச்சல் மற்றும் குளித்தில் போதான ஏற்பட்ட சட்பவங்களாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் இரண்டு தாய்மார், மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.


இதனையொட்டி கல்வி அமைச்சானது பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சிரேஸ்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கல்வி அதிகாரிகளின் அனுமதியின்றி மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.


தகவல் - டேய்லி நியூஸ் (27.08.2024)



கருத்துரையிடுக

0 கருத்துகள்