கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு உள்நாட்டு/வௌிநாட்டு விடுமுறை வழங்கலை இரத்து செய்ததை கல்வி அமைச்சு வாபஸ் வாங்கியுள்ளது.
பணியாளர் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு 01.10.2024 இற்கு பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்படும் என 05.09.2024 கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் ஒப்பமிடப்பட்ட கடிதம் வௌியிடப்பட்டது.
எனினும் இன்றைய தினம் (06.09.2024) மேற்படி கடிதத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்படி கடிதத்தை இரத்து செய்வதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் ஒப்பமிடப்பட்ட கடிதம் வௌியிடப்பட்டுள்ளது.
எனவே 14/2022 சுற்றறிக்கைகளின் பிரகாரம் உள்நாட்டு/வௌிநாட்டு சம்பளமற்ற லீவுக்கு கல்வி அமைச்சின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் விண்ணப்பிக்க முடியும்.
மேற்படி கடிதத்தின் சிங்கள அவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்