கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை தொடர்பான அறிவிப்பு


கல்வி அமைச்சு மேற்படி கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளது. மேலதிக விடயங்கள் பின்வரும் இணைப்பில்


பொது நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I),14/2022(II),14/2022(III),14/2022(IV) பிரகாரம் வழங்கப்பட்டு வந்த உள்நாட்டு, வௌிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் செயற்பாடு இடைநிறுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் பணி புரியும் அனைத்து அலவலர்களுக்கும், மேற்படி சுற்றறிக்கை பிரகாரம் விடுமுறை வழங்கும் போது ஏற்படும் பணிக்குழாம் பற்றாக்குறை காரணமாக நிறுவனங்களின் பணிகள் முறையாகவும், வினைத்திறனாகவும் நடைபெறுவதில் சிக்கல்க்ள ஏற்பட்டுள்ளன.

அதனால், 2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் மேற்படி விடுமுறை அனுமதிக்கும் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல் படி, மேலதிக கல்விச் செயலாளரின் ஒப்பமிடுதலுடன் 05.09.2024 ஆம் திகதி வௌியிடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்படுகின்றது.


பின்வரும் கடிதம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது




கருத்துரையிடுக

0 கருத்துகள்