சனாதிபதி தேர்தலுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தொழில் அமைச்சு


21.09.2024 ஆம் திகதிய ஜனாதிபதி தேர்தலையொட்டி தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் வாக்குகளை வழங்க உதவும் வகையில் விசேட விடுமுறை வழங்குவது தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பத்திரிகை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

தொழில் புரியும் இடம் மற்றம் வாக்கு வழங்கும் நிலையத்துக்கு இடைப்பட்ட தூரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டிய விடுமுறையின் அளவு தீர்மானிக்கப்படும்.

குறைந்த அளவு விடுமுறையாக 1/2 நாளும், கூடிய அளவு விடுமுறையாக 2 நாட்களும் காணப்படும் அதே வேளை, மேற்குறிப்பிட்ட கால அளவு ஆகக் குறைந்தது ஆகும் என்பதுடன் நாடில் சில் தொழில் புரியும் இடத்திலிருந்து வாக்குகளை வழங்கும் நிலையத்திற்குச் சென்று திரும்பவும் தொழில் புரியுமிடத்திற்கு வந்து சேர வேண்டிய கால அளவு போதுமானதாக இல்லா சந்தர்ப்பத்தில் மூன்று நாட்கள் தேவைப்படின் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகை அறிவித்தலினை பெற பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பத்திரிகை அறிவித்தல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்