தாய்மார்களே...! உங்கள் பெண் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துங்கள்


சிறுவர் துஸ்பிரயோகங்கள் நாட்டில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முக்கியமான தாய்மார்கள் தமது பெண் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். அவர்களுக்கான அரவணைப்பு, பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும்.

இன்றைய தினமின பத்திரிகையில் வௌிவந்த இரண்டு சம்பவங்களை படிப்பினைக்காக பதிவு செய்கிறோம்.


சம்பவம் 1 - தினமின 16.09.2024

வவுனியாவில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மற்றுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தனது தந்தையின் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, முதலில் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் தந்தையின் உறவினரான இளைஞன் ஒருவன் அவ்வீட்டில் தரித்துள்ளார். அவனாலும் குறித்த மாணவி துஸ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். 

2020 இல் தனது தனது மூத்த மகளிற்கும் இவ்வாறான கொடுமையை நிகழ்த்தியதன் காரணமாக வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


சம்பவம் 2 - தினமின 16.09.2024
வெலிகம இல் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேக நபர்களான சிறுமியின் தந்தை மற்றும் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த சிறுமியின் வயது 12 ஆகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் குழந்தை பிறப்பிற்காக தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் , தனது தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் இருந்த சமயம் 10 வயதில் குறித்த சிறுமி தந்தையினால் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். 
பின்னர் பெற்றோர் இல்லாத சந்தரப்பத்தில் குறித்த சிறுமியின் இரு சகோதரர்களால் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்