பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் 20 000 நிராகரிப்பு

 

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களில் 20, 551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 738 659 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட செயலகங்கள் , தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்களில் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளிலும், அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன.

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

மூலம் - தினகரன்(22.10.2024)



கருத்துரையிடுக

0 கருத்துகள்