தவணைப் பரீட்சை வினாத்தாள் குழறுபடி - மத்திய மாகாணம்



இரண்டாம் தவணைப் பரீட்சையின் போது, மத்திய மாகாணத்தில் இரண்டாம் மொழி தமிழ் பரீட்சையின் போது, தரம் 8 மற்றும் 9 இற்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 8 க்கு தயாரிக்கப்பட்ட அதே வினாத்தாள் தரம் 9 இற்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வினாத்தாள்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்த பதம் மாத்திரமே என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தரம் 9 இற்கு உரிய வினாத்தாள்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

இது பற்றிய பத்திரிகைக் செய்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.




கருத்துரையிடுக

0 கருத்துகள்