பாடசாலை மாணவிகளிடம் பணம் வசூலித்ததாக முறைப்பாடு



கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை மீறி கண்டி பாடசாலை ஒன்றில் மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 100 ரூபா பெறுமதியான டிக்கட் விற்பனை செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீட்டிழுப்பின் மூலம் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் எனக்கூறப்பட்டு மேற்படி டிக்கட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் மூலம்  - தினகரன் 05.10.2024

கருத்துரையிடுக

0 கருத்துகள்